ரூ. 2 லட்சம் மோசடி – பெண் மீது வழக்கு..! 

ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து குடியிருந்தார்.சுனிதா தற்போது வீட்டை காலி செய்ய போவதாகவும், போக்கியமாக கொடுத்த ரூ 2 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டார்..அந்த பணத்தை மஞ்சுளா திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் .இது குறித்து சுனிதா போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் மஞ்சுளா மீது மோசடி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..