வியாபாரி காரில் திடீர் தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர் ..!

கோவை மாவட்டம் ஆனைமலை.புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36) அங்குள்ள வசந்தம் நகரில் இளநீர் கடை வைத்துள்ளார்.இவர் நேற்று தனது உறவினர்கள் 4 பேருடன் காரில் ஆனைமலையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ரோடு ஓரத்தில் காரை நிறுத்தினார். காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அதன் பிறகு சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுதும் கரும் புகையாக காட்சி அளித்தது இது குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைத்தனர்.கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதும் 5 பேரும் அவசர அவசரமாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது..