வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவி சித்திரவதை… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை உக்கடம் சிலேட்டர் அவுஸ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக்.இவரது மனைவி தனலட்சுமி (வயது 24) இவர்களுக்கு 7 -9 -20 22 அன்று திருமணம் நடந்தது.திருமணத்திற்கு முன் கார்த்திக் தன்னை ஐ.டி டிப்ளமோ படித்துவிட்டு வேலை பார்ப்பதாகவும் சொந்த வீடு இருப்பதாகவும் கூறி திருமணம் முடித்தார்.திருமணத்திற்கு பின்பு அவர் எந்த வேலைக்கும் செல்லாமல், சேவல் சண்டை சூதாட்டத்தில்ஈடுபட்டு வந்தது மனைவிக்கு தெரிய வந்தது.இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது மனைவிக்கு மிரட்டல் விடுத்தாராம்..மேலும் அவரது குடும்பத்தினர் அய்யாசாமி, கண்ணம்மாள் சந்திரசேகர் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை வாங்கி வருமாறு கூறி 3மாத கர்ப்பிணியான தனலட்சுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.இது குறித்து தனலட்சுமி கூடுதல் மகிளா நீதிமன்றம் மூலமாக மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் அழகு தேவிவிசாரணை நடத்திகணவர் கார்த்திக் மாமனார் அய்யாசாமி, மாமியார் கண்ணம்மாள், உறவினர் சந்திரசேகர் உட்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்…