ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்க செயின் திருட்டு..!

கோவை கணபதிபுதூர் 6-வது வீதியை சேர்ந்தவர் சண்முகம் .அவரது மனைவி தனலட்சுமி ( வயது 65) இவர் நேற்று சிவானந்த காலனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உறவினரை பார்ப்பதற்காக கணபதியில் இருந்து டவுன் பஸ்சில் காந்திபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை நைசாக திருடிவிட்டனர். இது குறித்து தனலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.