எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேர் கைது..!

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.