வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை..

கோவை வடவள்ளி எம்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). தூய்மை
பணியாளர். இந்த நிலையில் இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல்
வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு
சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.