சொகுசு காரில் 100 கிலோ குட்கா கடத்தல் – 2 வடமாநில இளைஞர்கள் கைது..!

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளம்- வேடப்பட்டி ரோட்டில், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போ அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 100 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அமரா ராம் (வயது 22)கோபால் குமார் ( வயது 24 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்கள் இருவரும் சூலூர் பக்கம் உள்ள கரையாம் பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள்.வியாபாரி ஒருவருக்காக இந்த குட்காவை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது . காரும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காருக்கு உரிமையாளரான வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.