அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டர் சாவு..

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகன் கார்த்திகேயன் (வயது 33) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பேரூர்- சிறுவாணி ரோட்டில் உள்ள சீதாலட்சுமி நகர் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.