சிறுமிக்கு பாலியல் தொல்லை… தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 5- 1 2019 அன்று சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய செல்வபுரம் போலீசார் தந்தை அவரது 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, மசூதா பேகம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி போக்சோ கோர்ட்டில் 3 பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்கள் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜராகி வாதாடினார்.