லாரி – பைக் மோதல் : தந்தை மகன் பரிதாப பலி..

கோவை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள ரங்கநாதபுரம் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) இவரது மகன் பிரபாகரன் ( வயது 39)சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை – அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டினார். தந்தை முத்துசாமி பின்னால் இருந்தார். அங்குள்ள கொள்ளுபாளையம் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி  இவர்கள் சென்ற பைக் மீது மோதியது . இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். இது குறித்து பிரபாகரன் மனைவி சுவாதிகா சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த மயிலம்பட்டி ராமசாமி நகரை சேர்ந்த 18 வயது வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.