திருமண ஆசைகாட்டி ஆசிரியையிடம் உடலுறவு – காதலன் மீது வழக்குப்பதிவு..!

கோவை : பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கணபதி நகரை சேர்ந்த சேகர். இவரது மகள் மதிவாணி (வயது 35) ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் தங்கியிருந்தார். இவரிடம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவர் பழகி வந்தாராம். பின்னர் ஆசை வார்த்தை காட்டி மதிவாணியுடன்  உடலுறவு செய்தாராம். இதையடுத்து இவரை திருமணம் செய்ய மறுத்து விட்டாராம் .இது குறித்து மதிவாணி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.