2 வீடுகளை வாடகைக்கு எடுத்து குளு ,குளு, அறையில் விபசாரம்: 4 பெண் தரகர் கைது- 6 அழகிகள் மீட்பு..!

கோவை காந்திபுரம், சத்தி ரோடு, அலமு நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். புதுச்சேரி, கோரிப்பேட்டை சேர்ந்த சூரிய பிரகாஷ் ( வயது 19)கைது செய்யப்பட்டார். செந்தில் என்பவரை தேடி வருகிறார்கள்.இதே போல சரவணம்பட்டி, துடியலூர் ரோடு, டேங்க் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள குளு, குளு அறையில் விபசாரம் நடத்தியதாக பாண்டிச்சேரி பிரவீன் குமார் (வயது 33 )திருப்பூர் மாவட்டம் மங்கலம் முகமது ஆசிப் (வயது 24) திண்டுக்கல், பழைய ரயில் நிலையம் ரோட்டைச் சேர்ந்த மதன் தாஸ் (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அழகிகள் புஷ்பா குமாரி( வயது 25)தன் சிலா (வயது 33)மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரியா மிஸ்திரி ( வயது 21) குஜராத் ஹேப்பி (வயது 27 )டெல்லி மம்தா ( வயது 33)ஆகியோர் கைது செய்யப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.