கோவை டாக்டர் வீட்டில் நகை, பணம் திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை,சஞ்சீவி நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பாரதி (வயது 33 )ஆயுர்வேத டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாரதி வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் சின்ன தடாகம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வேலுசாமி மனைவி பாரதி (வயது 35) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பாரதியின் வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம், நகைகள் திருட்டு போனது .இதனால் சந்தேகம் அடைந்த பாரதி வீட்டின் பீரோ அருகே செல்போனை வைத்து வீடியோ எடுத்தார். இதில் வீட்டில் வேலை பார்த்து வந்த பாரதி பீரோவை திறந்து அதிலிருந்து ரூ 4 ஆயிரத்தையும், 2 பவுன் நகைகளையும் திருடியது தெரிய வந்தது. இந்த காட்சிகள் செல்போனில் பதிவாகியுள்ளன . இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வேலைக்கார பெண் பாரதியை நேற்று கைது செய்தனர் .மேலும் அவரிடமிருந்து ரூ 34 ஆயிரம் பணம், 2 பவுன் நகை மீட்கப்பட்டது..