தோட்டத்தில் சூதாட்டம் : 22 பேர் கைது – ரூ. 3.23 லட்சம் பறிமுதல்..!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையம் சுப்பிரமணி ( வயது 48) பருவாய் கார்த்திக் ( வயது 40 )லூர்துபுறம் செல்வராஜ் (வயது 60) ருத்ரவதி விஸ்வநாதன் (வயது 50 )வெள்ளியங்காடு செந்தில்குமார் ( வயது 51) காட்டம்பட்டி மூர்த்தி ( வயது46) வடுகபாளையம் கதிர்வேல் ( வயது 48) தென்னம்பாளையம் சேகர் ( வயது 52) விஜயமங்கலம் (வயது36) வெள்ளியங்காடு மருதாச்சலம் (வயது53) உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ 3 லட்சத்து 23 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.