புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டத்தைப் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்த அமைச்சர்..!

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் 128’வது ஆய்வை தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் தொகுதியில் அமைந்துள்ள கிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், சேலையூர் உயர்நிலைப் பள்ளியிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளி மாணவிகளிடம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டத்தைப் பற்றியும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தைப் பற்றியும் எடுத்துரைத்து மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்..