மனைவியை பிரிந்து திருமணமான பெண்ணுடன் வாழ்ந்து வந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை..

கோவை செல்வபுரம் வடக்கு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம் (வயது 30). கூலி தொழிலாளி.
இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாசானம் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது கல்லமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாசானத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. நாளாடையில் அந்த பெண்ணுடன் சேர்ந்து மாசானம் குடும்பம் நடத்த தொடங்கினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கும் மாசானத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் அந்த பெண் அவரை பிரிந்து சென்றார். இதனை நினைத்து மாசானம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.மனைவியும், தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாசானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.