பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோ திருட்டு.

கோவை பேரூரூர் அருகே உள்ள காளம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.ஆட்டோ டிரைவர். இவர் எட்டி மடையை சேர்ந்த மருது முத்து என்பவரது ஆட்டோவை ஓட்டி வருகிறார்.இந்த ஆட்டோவை பெரிய கடை வீதி கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பழனிச்சாமி உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.