பைக் மீது பள்ளிக்கூட பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி..!

கோவை காந்திநகர் பக்கம் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், இவரது மகன் நிரஞ்சன் (வயது 20) இவர் நேற்று பீளமேடு அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் இவரது பைக் மீது மோதியது..இதில் நிரஞ்சன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பள்ளிக்கூட பஸ் டிரைவர் குமாரபாளையம், எல்.ஜி.வி. நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.