விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவனை தாக்கி செல்போன் பறிப்பு – கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை ஆவராம்பாளையம் அம்பாள் நகர் ,ஜானகி அம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் முஹம்மத் அமீர் (வயது 15) தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் .இவன் நேற்று பீளமேடு ரயில் நிலையம ரோட்டில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரை மிரட்டி அவரது செல்போனை கேட்டது. கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த முகமது அமீர்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி மற்றொரு கார்த்தி, பூபதி ,மணி, ஷாகிம் விக்கி உட்பட கும்பலை தேடி வருகிறார்கள்..