சத்தியமங்கலம்: தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் அவைத் தலைவர் ஜோசப், நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமலர் நாளிதழ் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் நீலமலை கார்த்திகேயன், மணிகண்டன், ஜெயந்தி, மாவட்ட பிரதிநிதிகள் கேஎம்எஸ் முருகன், பவுஜில் ஹக், பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சபியுல்லா, பாலச்சந்தர், சதாசிவம், நாஸீர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வேலுச்சாமி, மற்றும் மூத்த நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள், நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply