ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 43 )இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் அளவுமானி கணக்கீட்டாளர் நடராஜ் என்பவரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் கொடுத்தார். நடராஜர் கூறியபடி கட்டிட வரைபட அனுமதிக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதிக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு அந்த ரசீதை காண்பித்துள்ளார் . அதன் பின்னர் நடராஜ் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 10,450 ரூபாயை செலுத்தி விட்டு தனக்கு தனியாக ரூ 5 ஆயிரம் கொடுத்தால் மட்டும் கட்டிட வரைபடம் அனுமதிக்கு ஒப்புதல் வாங்கி தரப்படும் என்று கூறினார். ஹரிஹரன் தனது குடும்ப கஷ்டத்தை எடுத்துக்கூறியும் நடராஜ் கேட்கவில்லை. இது குறித்து ஹரிஹரன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ 5 ஆயிரத்துடன் ஹரிஹரன் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அந்த பணத்தை அலுவலகத்தில் பணிபுரியும் சசிகலா என்பவரிடம் கொடுக்குமாறு நடராஜ் கூறினார். பணத்தை சசிகலா வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியது நடராஜ் கூறியதன் பேரில் தான் பணத்தை வாங்கியதாகவும், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.இதை யடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடராஜிடம் போலீசார்துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இதில்இவர் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது .இதையடுத்து நடராஜை போலீசார் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..