வேலை தருவதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ 7.61 லட்சம் மோசடி..!

கோவை சரவணம்பட்டி எல். ஜி. பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முருகன். இவரது மனைவி பிரிய லட்சுமி (வயது 39)இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் இணைந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரியதர்ஷினி அந்த முகவரிக்கு ரூ. 7 லட்சத்து 61 ஆயிரத்து 916 அனுப்பி வைத்தார் . பின்னர் தொடர்பு கொண்ட போது எந்த தகவலும் இல்லை.அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. மோசடி என்பதை உணர்ந்தார். இது தொடர்பாக பிரியலட்சுமி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.