ஸ்கூட்டி மீது கார் மோதி தாய் பரிதாப பலி – மகன் படுகாயம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி. புரம் ஜி. ஆர் ஜி நகரை சேர்ந்தவர் கமல ராஜா . இவரது மனைவி 27 வயது பெண்.மகன் குமரன் ( வயது 7) இருவரும் ஸ்கூட்டியில் தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். யானைகள் முகாம் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது . இதில் ஸ்கூட்டி ஓட்டி வந்த கமலராஜா மனைவி அதே இடத்தில் இறந்தார். பின்னால் இருந்த அவரது மகன் குமரன் படுகாயத்துடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கமலராஜா காரமடை போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகிறார்.