அழகிகளை காட்டி விபச்சார அழைப்பு… 2 பெண்கள், தரகர் கைது..!

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துக்குமாரை கைது செய்தார். சென்னையை சேர்ந்த கார்த்திகா( வயது 32) ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ( வயது 23) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . இவர்கள் பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.