கோவை தொழிற்சாலையில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பர் இரும்பு திருட்டு – கொள்ளையன் கைது..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரன் கடந்த 5-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து எதிரியைதேடி வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி மகன் பூவலிங்கம் (வயது 32)என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக பூவலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட சுமா‌ர் 5 லட்சம் மதிப்புள்ள 674 காப்பார் இரும்பு பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ..