ட்ரோன் மூலம் கண்ணீர் புகை வீசும் ஒத்திகை நிகழ்ச்சி… கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்..!

கோவை : கண்ணீர் புகையுடன் பறந்து சென்று கலகக் கூட்டத்தின் மீது துல்லியமாக கண்ணீர் புகை வீசும் திறன கொண்ட ட்ரோன் கருவியை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை உருவாக்கி உள்ளது.

இதன் ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. கலகக்காரர்கள் மீது துல்லியமாக கண்ணீர் புகை வீசும் காட்சி தத்ரூபமாக இருந்தது.இந்த நிகழ்ச்சியை ஏராளமான காவலர்களும், போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் கண்டு களித்தனர்..