கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தங்க நகைகள் மீட்பு.!!

கோவை ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, 4வது பிளாட்பாரத்தில், 9.300 கிராம் தங்க செயின் மற்றும், 1.470 கிராம் மோதிரம் கேட்பாரற்று கீழே கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் யாரும் உரிமை கோராததால், போலீசார், தாசில்தாரிடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் தங்கத்தின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் கோவை ரயில்வே போலீசாரை அணுகும்படி கேட்டுக் கொண்டனர்..