வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – கணவரின் நண்பர் மீது புகார்..!

கோவை காந்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் .இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணம் ஆகி எனது கணவருடன் வசித்து வருகிறேன் எனது கணவரின் நண்பரான மதுசூதனன் (வயது 22) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் நண்பர் என்பதால் அவருடன் சகஜமாக பேசி வந்தேன். சம்பவத்தன்று எனது கணவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த நான் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தேன். அப்போது எனது கணவரின் நண்பர் வீட்டுக்கு வந்தார். நான் அவரிடம் எனது கணவர் வேலைக்கு சென்று விட்டார் என்று கூறினேன். நான் தனியாக இருப்பதை உறுதி செய்த அவர் திடீரென்று அத்துமீறி என்னை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனால் நான் சத்தம் போட்டேன் .உடனே ஆத்திரமடைந்த அவர் என்னை தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டினார். அத்துடன் இந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் உன்னையும் உனது கணவரையும் மற்றும் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது இது தொடர்பாக மதுசூதனன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..