9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி ,கொள்ளு பாளையத்தைச் சேர்ந்தவர் பரமா என்ற பரமசிவம் ( வயது 31 ) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் குற்றம் சாட்டப்பட்ட பரமா என்ற பரமசிவத்துக்கு ஆயுள் தண்டனையும் ரு 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசிதா ஆஜர் ஆனார்.