பி.ஏ.பி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் மீட்பு – போலீசார் விசாரணை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் ஷட்டர் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். இது குறித்து கோலப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.