105 கொடிக்கம்பம் அகற்றம் – முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு..!

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு சுந்தராபுரம் சந்திப்பில் அனுமதி பெறாமல் ரோட்டில் இருபுறமும் 12 அடி உயரத்துக்கு 105 கொடிக்கம்பங்கள் நட்டியிருப்பது தெரியவந்தது .இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணி சேகரன் சுந்தராபுரம்போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பத்தை அகற்றினார்கள். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழககட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ரோகினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.