ரியல் எஸ்டேட் அதிபர் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 53) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவசுப்பிரமணியம் தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.