புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பதவி காலம் மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பு..!

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிகிறது அதனை ஒட்டி புதிய துணைவேந்தர் நியமிப்பதற்கு கல்வி அமைச்சகம் புதுச்சேரி பல்கலை செயற்குழுவில் உள்ள இருவரின் பெயரை பரிந்துரை செய்ய கூறியிருந்தது. இந்நிலையில் துணைவேந்தர் குர்மித் சிங் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை மத்திய கல்வி அமைச்சக உயர்கல்வித்துறை செயலர் நவீன் குமார் பிறப்பித்துள்ளார். தற்போது துணை வேந்தர் குர்மீத்சிங் புதுச்சேரி பல்கலை கல்வி நிர்வாக ரீதியாக அதன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முழுமையாக கவனம் செலுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ் புதுச்சேரி பல்கலை க்கழகம் உலக அளவிலும் தேசிய அளவிலும் தரவரிசை நிறுவனங்களால் வழங்கப்படும் தர வரிசையில் உயரிய நிலையை அடைந்துள்ளது .அவர் அண்மையில் தமிழ்நாடு காந்தி கிராம கிராமிய நிகர் நிலை பல்கலையின் துணை வேந்தராக கூடுதலாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..