அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் அருகே உள்ள உதய நத்தம்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கார்த்திக் (வயது 26) இவர் கோவையை அடுத்த குரும்ப பாளையத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சுபாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று கார்த்திக்கும், சுபாவும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மண் சளிக்கும் எந்திரத்தை கார்த்திக் இயக்க முயன்றார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரைசிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவில் பாளையம் போலீசில்புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply