கோடநாடு கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போராட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு..!

சென்னை: கோடநாடு கொலை வழக்கை துரிதப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம், பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கோடநாடு கொலை குற்றவாளிகள் யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து குற்றவாளிகள் மற்றும் இவர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்தவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்தும் கோடநாடு வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் குற்றவாளிகளை வெளிக்கொண்டு வருவோம் என்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஆக1 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.