120 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு ..!

தாலுகா அளவில் பணியாற்றும் 120 எஸ்ஐக்களை ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள அவர் இன்று நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது, 2008ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 120 எஸ்.ஐ.க்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 8 மாதங்களில் தமிழகத்தில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை எனவும் கூறினார்.