தயவு செய்து மாணவிகள் DP-யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் – மகளிர் ஆணைய தலைவி வேண்டுகோள்..!

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதி லட்சுமி, லோக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய பிரச்சனை சைபர் கிரைம். குறிப்பாக, பெண்கள் சமூக வலைதளங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், கலைஞர் இவர்களெல்லாம் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர்களெல்லாம் எங்களுக்காக போராடிய தலைவர்கள். பெண்களுக்கான சொத்து உரிமை எனப் பல சட்டங்களை கூறலாம்.

இதைப் பற்றியெல்லாம் கல்லூரி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மாணவிகள் வாட்சப் டிபி யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். அந்தப் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள். தொழில் நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம். அதை மாணவிகளுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறோம்” என கூறினார்..