உதவி செய்வது போல் நடித்து… மூதாட்டியிடம் 3 பவுன் தங்க வளையல் திருட்டு – பெண்ணுக்கு வலைவீச்சு..!

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பாரதி விதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி செல்வரத்தினம் ( வயது 75) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சில் வைத்து இவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அவர் செல்வ ரத்தினத்துக்கு உதவி புரிவது போல நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 2 தங்க வளையல்களை மோசடி செய்து விட்டார்.இதுகுறித்து செல்வரத்தினம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.