காரில் கடத்த முயன்ற 346 கிலோ குட்கா பறிமுதல் – கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது..!

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு காட்டூர் சோமசுந்தரம் மில் ‘ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா 346 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் குட்காவும், பணம் ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.இதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுஜா ராம் , கோவிந்த் மீனா, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த செந்தில் வேல் என்ற சூர்யா.ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கோவிந்த் மீனா பி .ஏ .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செந்தில்வேல் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சுஜா ராம் ஒரு கடையில் ஒரு விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.