போலீஸ் அதிகாரி போல் நடித்து திருநங்கைக்கு உல்லாச அழைப்பு- வாலிபர் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள வி, கே. எல். நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் வந்த ஒருவர் தன்னை அந்த பகுதி சப் இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார் .பின்னர் அந்ததிருநங்கையிடம் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறிஆசைக்கு இணங்க அழைத்தார். அவர் மறுத்ததால் அந்த திருநங்கையை மிரட்டியதாக கூறப்படுகிறது .அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியிடம் அந்த திருநங்கை இது பற்றி கூறினார். இதற்கிடையே போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர்ரை சேர்ந்த கேன்டின் தொழிலாளி ஆகாஷ் (வயது 24 )என்பதும் தெரிய வந்தது. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.