முகவரி கேட்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் தங்கச் செயின் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!

கோவை பெரிய நாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சசிகலா இவர்களது மகள் சுவேதா ( வயது 16)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இந்த நிலையில் சுவேதா நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த மாணவியிடம் முகவரி கேட்பது போல நடித்துஅருகில் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்..