வித்தியாசமான கெட்டப்பில் சென்ற தனம்மாள்.. கஞ்சா பார்ட்டியை மடக்கி பிடித்து கைது.!!

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் அம்பத்தூரை அடுத்த பட்டறை வாக்கம் ரயில் நிலையம் அருகே தனியாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம ஆசாமி கையில் ஒரு பையுடன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். தனம்மாள் அவனிடத்தில் போய் ஏம்பா போன வாரம் ஒரு தள்ளு ஆசாமியிடம் மட்டமான சரக்கை வாங்கி விட்டேன் . எங்க உன்கிட்ட இருக்க சரக்கை காண்பி எனக் கேட்டாராம் .அவனும் என்னிடம் இருக்கும் சரக்கு சும்மா ஜிவ்வென்று ஏறும் என உளறி கொட்டினான். கிடுக்கு பிடி போட்ட தனம்மாள் அவனை கைது செய்து விசாரணை நடத்தினார் . அவனது பெயர் விவரம் வருமாறு சி எஸ் செபி வயது 26 தகப்பனார் பெயர் சாஜி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவன். இவனிடத்தில் அதிக போதை ஏற்றும் 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..