பொள்ளாச்சி ஓட்டல் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை: பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் ( வயது 59) ஹோட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவானந்தம் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் கயிற்றைகட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது..