ஒர்க் ஷாப்பில் மின்கம்பி திருடிய வடமாநில தொழிலாளி கைது..!

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 54) ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்..இவரது ஒர்க் ஷாப்பில் இருந்து 100 மீட்டர் எலக்ட்ரிக்கல் மின்கம்பியை யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து பழனிசாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன்தாஸ் ( வயது 30) என்பவரை நேற்று கைது செய்தார். இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் வசித்து வந்தார். இவரிடம் இருந்து 100 மீட்டர் மின்கம்பி மீட்க்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது..