கோவை கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் – 2 பேர் கைது..!

கோவை ஆர் எஸ் புரம் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த மூர்த்தி. இவரது மகன் சுஷாந்த் ( வயது 19 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் நடந்து வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை 2 பேர் வழிமறித்து தாக்கினார்கள்.இது குறித்து ஆர் எஸ் புரம் போலீசில் சுஷாந்த் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மார்க்கெட் லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி ( வயது 17) மூன்று கம்பம் பகுதியைச் சேர்ந்த சபரி கிருஷ்ணன் ( வயது 17) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..