கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் லைசன்ஸ் புதுபிக்காத 8; கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது…

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 120 கடைகள் லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், அதில் 8 கடைகளுக்கு இதுவரை லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், இந்த 8 கடைகளுக்கு சீல் வைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி கண்ணன் முன்னிலையில் அதிகாரிகள் 8 காய்கறி கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.இதனால் காய்கறி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது