பொள்ளாச்சி சாலை விபத்தில் வங்கி ஊழியர், காவலாளி பரிதாப பலி..

பொள்ளாச்சி: ஈரோடு மாவட்டம் நந்தவனம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 31). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் நந்தனார் காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெகதீஸ்வரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெகதீஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரான் (68). காவலாளி. சம்பவத்தன்று இவர் வடக்கிப்பாளையம் பிரிவு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஆரான் மீது மோதி விட்டு நிற்காமல் செய்தனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை  தேடி வருகிறார்கள்.