கோவை ரயில் தண்டவாளத்தில் பிரபல கொள்ளையன் சடலமாக மீட்பு..

கோவை போத்தனூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு செல்போன் மற்றும,ஒட்டுனர் உரிமம் இருப்பதை கண்டறிந்தனர் அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சாய்பாபா காலனி அருகே உள்ள இடையர்பாளையம் சேர்ந்த சிவக்குமார் ( வயது 45) என்பதும் ‘அவர் சாய்பாபா காலனி பகுதியில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சிவக்குமார் மீது சாய்பாபா காலனி ஆர.எஸ். புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதும்தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவக்குமாரின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்தது குறிிப்பிடத்தக்கது.