பள்ளிக்கூடம் மாற்றியதால் பிளஸ் 2 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை தொப்பம்பட்டி,அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் குமாரவேல் இவர் சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் .இவரது மகன் கனிஷ்கன்ஸ் (வயது 18)இவன் போடியில் உள்ள ஒரு தனியார்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.அங்கு ஒழுங்காக படிக்காததால் அவனை துடியலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் சேர்த்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனிஷ்கன்ஸ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் போர்வையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை குமரவேல் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.