பி ஏ பி .வாய்க்காலில் மூழ்கி முதியவர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சோமந்துறையை சேர்ந்தவர் கிட்டான் (வயது 70) இவர் நேற்று அங்குள்ள பி. ஏ. பி. பெரிய வாய்க்காலுக்கு குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..